நெல்லை - தூத்துக்குடி பயணிகள் ரயில் இனி இயங்காது!

Update: 2024-08-19 09:30 GMT

ரயில் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருநெல்வேலி - தூத்துக்குடி இடையேயான பயணிகள்ரயில் திங்கள்கிழமை (ஆக.19) முதல் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலியிலிருந்து கங்கைகொண்டான், வாஞ்சிமணியாச்சி, தட்டாப்பாரை வழியாக தூத்துக்குடிக்கு தினமும் காலை 7.35 மணிக்கும், மறுமாா்க்கமாக மாலை 6.25 மணிக்கும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

பாலக்காடு - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படாது என ரயில்வே நிா்வாகம் முதலில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த ரயில் திங்கள்கிழமை (ஆக.19) முதல் முற்றிலும் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் மிகக் குறைந்த அளவே பயணிகள் பயணிப்பதால் ரயில் சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News