பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு !

Update: 2024-05-11 07:41 GMT

மாணவர்கள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் மறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேற்று வெளியான நிலையில் 8.94 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8.18 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் ஆக உள்ளது.

அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இந்த நிலையில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மறுதேர்வு எழுத அரசு தேர்வுகள் இயக்கககம் தெரிவித்துள்ளது.

அதற்கான அட்டவணையும் வெளியாகியுள்ளது. அதாவது ஜூலை 2ஆம் தேதி தமிழ், 3ஆம் தேதி ஆங்கிலம், 4ஆம் தேதி கணக்கு, 5ஆம் தேதி அறிவியல், 6ஆம் தேதி விருப்ப மொழிப்பாடம் மற்றும் 8ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அது போல் மறுகூட்டலுக்கு வரும் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Tags:    

Similar News