தூத்துக்குடியில் இருந்து கோவை, பேரூரணிக்கு புதிய பஸ் சேவை

தூத்துக்குடியில் இருந்து கோவை மற்றும் பேரூரணிக்கு புதிய பஸ் சேவையை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-10 16:27 GMT

பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்பி

தூத்துக்குடியில் இருந்து கோவை மற்றும் பேரூரணி பகுதிக்கு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து புதிய பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.

இந்த புதிய பஸ் சேவை தொடக்க விழா தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையத்தில் நடந்தது. விழாவுக்கு போக்குவரத்து கழக பொது மேலாளர் வீருகாத்தான் தலைமை தாங்கினார்.

மண்டல மேலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கனிமொழி எம்.பி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஆகியோர் கலந்து கொண்டு, தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு புதிய விரைவு பஸ் மற்றும் தூத்துக்குடியில் இருந்து பேரூரணிக்கு புதிய டவுன் பஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.

விழாவில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, போக்குவரத்துக் கழக புறநகர் கிளை மேலாளர் சுரேஷ்குமார், நகர கிளை மேலாளர் ரமேஷ்கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News