மூங்கில்துறைபட்டில் புதிய மின்மாற்றி அமைப்பு

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது

Update: 2023-12-07 01:17 GMT

மூங்கில்துறைபட்டில் புதிய மின்மாற்றி அமைப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மூங்கில்துறைப்பட்டில் நடந்த மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையம் முன்பு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழாவிற்கு சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மின்வாரிய கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி கோட்ட பொறியாளர் கோமதி, இளமின் துணைப் பொறியாளர் மாயக்கண்ணன், ஊராட்சி மன்றத்தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜய் ஆனந்த், கட்சி நிர்வாகிகள் சேகர், துரைவேலன்,கலையரசன், குமார், காமராஜ், இளங்கோ உள்ளிட்டர் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News