நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி வீட்டில் என்.ஐ.ஏ சோதனை

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணனுக்கு சொந்தமான இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-02-02 05:29 GMT
மதிவாணன் 
தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர்கள் வீடுகள் மற்றும் சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி கிராமத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள மதிவாணன்(39) சொந்தமான இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது..
Tags:    

Similar News