2 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து சாதனை படைத்த நிஃப்டி!

Update: 2024-06-07 11:41 GMT

நிஃப்டி

இந்திய ரிசர்வ் வங்கியானது 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை 7 சதவிகிதத்திலிருந்து 7.2 சதவிகிதமாக உயர்த்தியதையடுத்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று 2 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து சாதனை படைத்தது.

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்திய பொருளாதாரம், முந்தைய ஆண்டில் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை மார்ச் 2025 வரை 7 சதவிகிதத்திலிருந்து 7.2 சதவிகிதமாக உயர்த்தியது. அதே நேரத்தில் பணவீக்க கணிப்பை 4.5 சதவிகிதமாக பராமரித்ததுள்ளது.

Advertisement

மஹிந்திரா & மஹிந்திரா, விப்ரோ, டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், இன்போசிஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

டோக்கியோ, ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க சந்தைகள் வியாழக்கிழமையன்று ஏற்ற - இறக்கத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ரூ.6,867.72 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

Tags:    

Similar News