தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

Update: 2024-02-19 07:17 GMT

 எடப்பாடி பழனிச்சாமி

திமுக ஆட்சியில் மக்களை கவரும் வகையில் பேச்சு மட்டும் தான் உள்ளது. செயல்பாடுகள் ஏதுமில்லை. என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுகவில் தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி, "அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை ஒழிப்பதே திமுக நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிமுக அறிவிக்கப்பட்ட பின்னரே முதல்வர் சிறுபான்மையினரை அழைத்து பேசுகிறார். பிரதமரின் வீடு கட்டும் திட்டம் அதிமுகவின் மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை திமுக கைவிட்டப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மக்களை கவரும் வகையில் பேச்சு மட்டும் தான் உள்ளது. செயல்பாடுகள் ஏதுமில்லை." என பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News