பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து: வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2024-04-29 15:14 GMT

எச். ராஜா 

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்தும், பொது அமைதியை குலைக்கும் நோக்கில் எச்.ராஜா தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாக புகார் எழுந்தது. சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்துச் செய்யக்கோரி எச்.ராஜா மனு அளித்து இருந்தார்.

விசாரணையை சந்திக்க எச்.ராஜாவிற்கு அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News