பைக் மோதி முதியவர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே பைக் மோதியதில் முதியவர் பலியானார்.;
Update: 2023-12-13 05:42 GMT
உளுந்தூர்பேட்டை அருகே பைக் மோதியதில் முதியவர் பலியானார்.
சிறுநாகலுார் பகுதியைச் சேர்ந்தவர் ராமர், 75; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு புதுகழனி அடுத்த கொட்டையூர் சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த பைக் மோதி விட்டு நிற்காமல் சென்றது.விபத்தில் படுகாயம் அடைந்த ராமர் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.