ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு திமுக இளைஞரணி சார்பில் ஒரு லட்சம் காசோலை

தென்காசியை அடுத்த புளியரைப் பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய திமுக யூத்விங் சார்பில் ஒரு லட்சம் காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2024-02-27 15:49 GMT

திமுக இளைஞரணி சார்பில் ஒரு லட்சம் காசோலை

தென்காசி பகுதியைச் சேர்ந்த ரப்பர் தோட்டத் தொழிலாளர்களான வயதில் முதிய தம்பதியினர் சண்முகையாவும் வடக்கத்தி அம்மாளும் விபத்துக்குள்ளான லாரி கவிழ்ந்து கிடந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை, டார்ச்லைட் அடித்து எச்சரிக்கை சிக்னல் கொடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் நொடிப்பொழுதில் சிந்தித்து துரிதமாகச் செயல்பட்டக் காரணத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளனர். இந்த தம்பதியின் துணிச்சலைப் பாராட்டி நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கியுள்ளார். இந்நிலையில், திமுக யூத்விங் அறக்கட்டளை சார்பில், ரூ.1 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கியதாகவும். சண்முகையா - வடக்கத்தி அம்மாள் தம்பதியினரின் மனித நேயமும் - வீரமும் போற்றுதலுக்குரியவை என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News