பொறியியல் படிப்புக்கு 1,31,050 விண்ணப்பங்கள் ஒன்பதாவது நாளில் பெறப்பட்டுள்ளன

பொறியியல் படிப்புக்கு இன்று வரை ஒரு லட்சத்து முப்பத்தி ஓராயிரத்து ஐம்பது (1,31,050) விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Update: 2024-05-15 01:51 GMT

பொறியியல் விண்ணப்பம்

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான கடந்த ஆறாம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்திருந்தது.  அதன்படி முதல் நாளில் 20 ஆயிரத்து 97 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், 9 ஆவது நாளான இன்று வரை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 51 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  இதில் 80 ஆயிரத்து 955 விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவுக்கான கட்டணத்தை பூர்த்தி செய்து இருப்பதாகவும், 46 ஆயிரத்து 528 விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணத்துடன் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்திருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News