சேலம் அன்னதானப்பட்டியில் ஒரு மாத குழந்தை திடீர் இறப்பு

அன்னதானப்பட்டியை சேர்ந்த ஒரு மாத குழந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி எதிர்பாராவிதமாக இறந்தது.

Update: 2023-11-29 10:46 GMT

 சேலம் அன்னதானப்பட்டியில் ஒரு மாத குழந்தை திடீர் இறப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 சேலம், அன்னதானப்பட்டி சண்முகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவிக்கு கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று குழந்தைக்கு வயிற்றுப்போக்குடன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக குழந்தை இறந்தது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News