அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர்
பூந்தமல்லி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியான நிலையில், அவருடன் வந்த நண்பர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Update: 2024-07-03 11:30 GMT
பலி
மதுரவாயல் அடுத்த அடையாளம் பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் இவரது நண்பர் சரத்குமார் இருவரும் பூந்தமல்லி நெடுஞ்சாலை வேலப்பன்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சரத்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
சுரேஷ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.