மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

ராணிப்பேட்டை அருகே மூளைசாவு அடைந்த போலீஸ்காரரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-04-10 11:52 GMT

மூளைச்சாவு அடைந்த காவலர்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அய்யம்பேட்டை, நடுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (28).இவர் சென்னை ஆவடியில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

சதீஷ்குமார் கடந்த 6-ந் தேதி விடுமுறையில் அய்யம்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.மறுநாள் காலை அதே பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு குளிக்க சென்றார். அப்போது அங்கு இளநீர் பறிக்க தென்னைமரம் ஏறியுள்ளார். தென்னைமரத்தின் உச்சிக்கு சென்ற சதீஷ்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ரத்தினகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சதீஷ்குமார் மூளைச்சாவு அடைந்தார்.

இதனையடுத்து சதீஷ்குமாரின் குடும்பத்தினர் அவரது நுரையீரல் தவிர்த்து மற்ற உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன் வந்தனர். அதன்பேரில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.மேலும் இது தொடர்பாக தமயந்தி காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News