விடுதி, இல்லங்கள் நடத்தும் உரிமையாளர்கள் உரிமம் பெற அறிவுறுத்தல்

விடுதி, இல்லங்கள் நடத்தும் உரிமையாளர்கள் உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டது.

Update: 2024-06-19 09:09 GMT

விடுதி, இல்லங்கள் நடத்தும் உரிமையாளர்கள் உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டது.


அரியலூர், ஜூன் 19 அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள், பெண்களுக்கான இல்லங்கள், சிறார் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள், பள்ளியுடன் இணைந்த விடுதிகள் நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.

இவ்வுரிமம் பெறாத விடுதிகள் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதாக கருதப்படும். எனவே உரிமம் பெறாத விடுதிகள் இணையதளம் வழியாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாத விடுதிகள் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தவறினால் விடுதியினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி தெரிந்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News