சாக்கடையாக மாறிய பாலாறு!

வேலூர் பாலாறு சாக்கடை போன்று மாறியுள்ளதால், கழிவுநீர் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-24 07:22 GMT

சாக்கடையாக மாறிய பாலாறு

வேலூர் பாலாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. தற்போது கோடைகாலம் என்பதால் பாலாறு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. ஆனால் சத்துவாச்சாரி மந்தவெளி அருகே உள்ள பாலாற்றில் தண்ணீருக்கு பதிலாக சாக்கடை கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. பாலாற்றை பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News