குடும்பத்த தகராறு காரணமாக பஞ்சாயத்து தலைவருக்கு கத்தி குத்து

குடும்பத்த தகராறு காரணமாக பஞ்சாயத்து தலைவரை கத்தியால் குத்திய நபர் கைது. போலீசார் வழக்கு பதிவு

Update: 2024-02-13 10:41 GMT

குடும்பத்த தகராறு காரணமாக பஞ்சாயத்து தலைவருக்கு கத்தி குத்து

திருச்செங்கோடு ஒன்றியம் பருத்திப்பள்ளி ஊராட்சி சோமனம்பட்டி கிராமத்தில் சித்தப்பா முறை உடைய செல்வராஜ் (33) என்ற ரிக் தொழிலாளி தனக்கு மகள் உறவு முறையில் உள்ள செவிலியர் வேலை பார்க்கும் 27 வயது பெண்ணுடன் காதல் திருமணம் செய்ததால் உறவுக்காரர்கள் முன்னிலையில் இருவரும் பிரிந்து விட அறிவுரை கூறிய மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்திப்பள்ளி ஊராட்சி தலைவர் கதிர்வேல் என்பவருக்கு கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடைய மூர்த்தி, சரண் என்ற இரண்டு பேர் கைது. கத்தியால் குத்திய முக்கிய குற்றவாளி குடியரசு என்பவருக்கு போலீஸ் வலைவீச்சு. சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News