ரூ.71.94 கோடி செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள்- மு.க.ஸ்டாலின் திறப்பு

Update: 2024-07-29 12:00 GMT

மு.க.ஸ்டாலின் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.07.2024) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சிவகங்கை, தேனி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, மதுரை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.71.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 35 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 391 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 10 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


Tags:    

Similar News