தூத்துக்குடி மக்கள் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு !!

கண்டா வர சொல்லுங்க எங்கள் தொகுதி எம்பி எங்கேயும் காணவில்லை என தூத்துக்குடி மாநகரப் பகுதியில் போஸ்டரால் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-03-02 10:15 GMT

போஸ்டரால் பரபரப்பு

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி உள்ளார். இன்னும் சில தினங்களில் பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கண்டா வரச் சொல்லுங்க எங்கள் தொகுதி எம்பி யை எங்கேயும் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த போஸ்டரில் அச்சகம் பெயர் மற்றும் இந்த அமைப்பு பெயரும் குறிப்பிடாமல் தூத்துக்குடி தொகுதி மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கனிமொழி கருணாநிதி எம்பி அலுவலகத்தில் கேட்டபோது கொரோனா காலத்திலும் சரி மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட போதிலும் சரி மக்களுடன் இணைந்து மக்கள் பணியாற்றிய ஒருவர் தான் கனிமொழி கருணாநிதி எம்பி மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி முழுவதும் அரசின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள், புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் கல்வி உதவி என பல்வேறு திட்டங்களை அவர் சொந்த செலவில் செயல்படுத்தி வருகிறார். அரசியல் காப்புணர்ச்சி காரணமாக இப்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. கனிமொழி எம்பி அவர்கள் மக்களுடன் இணைந்து மக்கள் பணியாற்றுவது குறித்து மக்கள் அறிவார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News