9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை துண்டு கட்டாக காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-02-14 06:55 GMT
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியல் காரணமாக கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 1 சதவீதம் பார்வையற்றவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அரசு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன தேர்வில் இருந்து முழுமையாக விளக்க அளித்து உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணி வழங்கிட வேண்டும். உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனர். சாலை மறியல் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Tags:    

Similar News