மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி

மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு பொருட்கள் வழங்கி, உழவாரப் பணிகளை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்

Update: 2024-03-14 01:14 GMT

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (13.03.2024) சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு மண்வெட்டி, ஏணி, ஒட்டடை குச்சி, துடைப்பம், தண்ணீர் பீச்சும் இயந்திரம் மற்றும் குழாய்கள் சலவைப் பொருட்கள் / தூய்மைப் பொருட்கள் வழங்கி, உழவாரப் பணிகளை தொடங்கி வைத்தார்.

உடன் இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், இணை ஆணையர்கள் லட்சுமணன், ரேணுகாதேவி, திருக்கோயில் செயல் அலுவலர் ம.சக்திவேல் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News