திருக்கோவிலூரில் பிரதோஷ வழிபாடு

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-12-11 07:12 GMT

திருக்கோவிலூரில் பிரதோஷ வழிபாடு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு மகா அபிஷேகம், அலங்காரம், 5:30 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 6:00 மணிக்கு, பக்தர்களின் ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க, வீரட்டானேஸ்வரர், நந்திகேஸ்வர பெருமானுக்கு ஒருசேர சோடசோபவுபச்சார தீபாரதனை,பிரதோஷ நாயகர் அலங்காரமண்டபத்தில் எழுந்தருளி, தீபாரதனை நடந்தது. பக்தர்களின் சிவபுராணம் முழங்க பிரதோஷ நாயகர் வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News