வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 21 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2024-03-20 15:20 GMT
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (20.03.2024) நடைபெற்றது. கூட்டத்தில் வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டனர். இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 21 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News