கலை அறிவியல் கல்லூரிகளுக்கு பொது வரைவு கால அட்டவணை வெளியீடு.

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. அதற்கான பொது வரைவு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-07-01 06:37 GMT

பைல் படம் 

. தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் வெவ்வேறு காலங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதால் பல்வேறு தாமதங்கள் ஏற்படுகிறது இதனால் முதுநிலை கல்விக்கும் கல்வி சாரா நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்கும் முறையான சூழல் இல்லாத நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு குழப்பத்தை தவிர்க்கும் வகையிலும் முதுகலை கல்விக்கு செல்வதில் குழப்பம் ஏற்பட்டு கல்வி தடைபடாமல் இருக்கவும் பொது வரைவு கால அட்டவணை கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் பின்பற்றும் வகையில் 2024 - 25 ஆம் கல்வி ஆண்டுக்கான வரைவு கால அட்டவணை தயாரிக்க கல்வியாளர்கள் குழு நியமிக்கப்பட்டு அவர்களின் பரிந்துரை அடிப்படையில் ஒரு பொதுவான விரைவு கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2024-25 ஆம் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும். வரும் ஆண்டுகளில் 1,3,5 பருவத்துக்கான தேர்வுகள் அக்டோபர் 31 ஆம் தேதி அன்று துவங்கி நவம்பர் 25ஆம் தேதி நிறைவடையும். தேர்வு முடிவுகள் டிசம்பர் 16 அல்லது அதற்கு முன்பு வெளியிடப்படும் . அதேபோல் 2,4,6 ஆகிய பருவத்துக்கான தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி மே 10ஆம் தேதி முடிவடையும். மே 31ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

Tags:    

Similar News