ஆணையர் பொறுப்பில் விலகிய ராதாகிருஷ்ணன் உருக்கம்

Update: 2024-07-18 05:35 GMT

ராதாகிருஷ்ணன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குமரகுருபரன் ஐ ஏ எஸ் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகி உள்ளார்

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பொறுப்பில் விலகிய ராதாகிருஷ்ணன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு முறை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக பணியாற்றும் பாக்கியம் கிடைத்ததாக தெரிவித்துள்ள அவர், ஆணையர் என்ற முறையில் அனைத்து அற்புதமான சக ஊழியர்களையும் கடைசியாக சந்திப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். மேலும், அற்புதமான சென்னை நகர மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News