ராமநாதபுரம் : 22 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
தமிழகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 22 மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.;
Update: 2024-03-10 03:52 GMT
மீன்பிடி படகுகள்
தமிழக மீன்பிடி துறைமுகங்களில் இருந்து நேற்று மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்ற மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மீன் பிடித்து கொண்டிருக்கும் பொழுது எல்லை தாண்டி மேம்படுத்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேரையும் மூன்று விசைப்படகையும் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்து காங்கேஷன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் எந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் என்பது விசாரணை முடிந்த பின் தான் தெரியவரும்.