ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ராணிப்பேட்டை குழந்தை நலக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளர்.

Update: 2024-02-17 16:52 GMT

மாவட்ட ஆட்சியர் 

குழந்தை நலக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

‘‘ ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை நலக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தகுதி வாய்ந்த நபர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித ஆரோக்கியம், மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் செயல்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயத்துக்குள் மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பதவி அரசு பணி இல்லை. இதற்கான ஒருவர் குழந்தை நலக்குழு தலைவர் அல்லது உறுப்பினராக நியமனம் செய்த தேதியில் இருந்து 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள். விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை இயக்குநர், சமூக பாதுகாப்பு துறை, எண்.300, புரசைவாக்கம், சென்னை - 600 010 என்ற முகவரிக்கு வரும் மார்ச் 3-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் நியமிக்கப்படுவார்கள்.தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் அரசின் முடிவே இறுதியானது’’ என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News