கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது ; சசிகலா குறித்து ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்!

Update: 2024-07-18 07:03 GMT

ஆர்.பி.உதயகுமார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது என்று ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, சசிகலா மேற்கொள்ளப்போகும் சுற்றுப்பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என்றும், இது அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் என்றார். அதிகாரம் கையில் இருந்தபோது சசிகலா தான் சார்ந்த சமூகத்துக்கு எதுவும் செய்யவில்லை.

மேலும், உள்ளடி வேலைகளின் காரணமாக அதிமுக ஆட்சியை இழந்ததாக குற்றம்சாட்டியவர், 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார். தான் சார்ந்த பின்புலத்தை காட்டி சசிகலா தன்னைத்தான் வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்கு எதுவும் செய்ததில்லை. சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு எதையும் செய்யவில்லை. சசிகலாவால் பயனடைந்தவர்கள் என்று யாராவது உள்ளார்களா?. சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம் என்றும் விமர்சனம் செய்தார்.           

Tags:    

Similar News