சாலை விபத்து: ரியல் எஸ்டேட் உரிமையாளர் உயிரிழப்பு

சாலை விபத்து: ரியல் எஸ்டேட் உரிமையாளர் உயிரிழப்பு

Update: 2024-05-21 15:45 GMT
விஜயகுமார்

தஞ்சாவூர் அருகே வல்லம் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆர்.விஜயகுமார் (47). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் மே.17 ஆம் தேதி தஞ்சாவூரில் வேலையை முடித்துவிட்டு, வல்லத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  தமிழ்ப் பல்கலைக்கழகம் எதிரில் தான்தோன்றியம்மன் கோயில் அருகே சென்ற இந்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த மினி வேன் மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த விஜயகுமார் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து, தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News