ரேஷன் கடைகளில் தட்டுப்பாடின்றி சீராக விநியோகம் செய்யப்பட வேண்டும் - ஈபிஎஸ் கண்டனம் !

Update: 2024-06-18 09:57 GMT

எடப்பாடி பழனிசாமி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் தட்டுப்பாடின்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துயுள்ளார். தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் விநியோகிக்கப்படவில்லை என்ற செய்தி கவலையளிப்பதாக  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பொது விநியோகத்தில் நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் ரேஷன் கடைகளில், பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு சீர்கேட்டை செய்த திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். 

மேலும், ''ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.'' என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News