தென்காசி : சுரண்டை ஓடையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Update: 2023-12-20 04:18 GMT

ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசி மாவட்டம் சுரண்டை - செங்கோட்டை சாலையின் வடபுறம் மழைநீா் வடிகால் ஓடை ஆங்காங்கே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதனால் சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 அடிக்கு தண்ணீா் தேங்கியது. தகவலறிந்த சுரண்டை நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன் உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டாா். இதையடுத்து, நகராட்சிப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலையின் வடபகுதியில் ஆக்கிரமிப்பு முழுவதையும் அகற்றினா். இதையடுத்து வயல்கள் மற்றும் அரசுப் பள்ளியில் தேங்கியிருந்த மழைநீா் வடிய தொடங்கியது.
Tags:    

Similar News