குடியரசு தினம்: மநீம கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றல்
குடியரசு தினத்தையொட்டி மக்கள் நீதி மைய கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-26 13:27 GMT
மநீம கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றபட்டது
இந்திய திருநாட்டின் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில் (26.01.2024) காலை 9.30 மணியளவில் துணைத் தலைவர் A.G.மௌரியா தேசியக் கொடி ஏற்றினார்.
இந்த நிகழ்வில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். தேசியக் கொடி ஏற்றிய பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து குடியரசு தினம் பற்றிய சிறுசிறு செய்திகளையும், சுதந்திர போராட்டத் தியாகிகள் பற்றியும், இந்திய அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள் பற்றியும் மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் அவர்கள் உரையாற்றினார்.