ராணிப்பேட்டை மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்கு ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ரூ.1 லட்சம் வழங்கினார்

நிவாரணம்

Update: 2023-12-15 06:41 GMT

நிவாரணம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 1 லட்சம் வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் செங்கோட்டையன் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிக்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி அவர்களிடம் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இதில் பேரிடர் மேலாண்மை வட்டாட்சிய பாலாஜி, தேசிய சுகாதார குழுமம் ஒருங்கிணைப்பாளர் விவேக், சமூக ஆர்வலர் புருஷோத் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News