சாலை அமைக்கும் பணி துவக்கம்

கொமாரபாளையம் பகுதியில் சாலை அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் துவக்கி வைத்தார்.

Update: 2024-03-11 01:58 GMT

சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

கொமராபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அங்கீகாிக்கப்படாத வீட்டுமனைப்பிாிவிற்கு செலுத்தப்படும் வளா்ச்சிக் கட்டண நிதியிலிருந்து சுமாா் ரூ 32,52,000 மதிப்பீட்டில் வி.என்.எஸ். நகா் சௌடேஸ்வாி அம்மன் கோவில் சாலை, வி.என்.எஸ். நகா் குபேர கணபதி வீதி சாலை, வி.என்.எஸ். நகா் கிழக்கு வீதி சாலை, ஏ.கே.எஸ். நகா் SAB சாலை முதல் அரசு கலைக்கல்லூாி சாலை, ஆகிய சாலைகளுக்கு புதியதாக தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன்,அவர்கள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது,

பவானிசாகா் சட்டமன்ற உறுப்பினா் A.பண்ணாாி., B.A., MLA., அவா்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தார் சாலை பணிகளை துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சி.என். மாரப்பன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் N.N.சிவராஜ், பவானிசாகர் வடக்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளர் சோமசுந்தரம்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் T.பிரபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிச்சாமி, துணைத் தலைவர் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் சுகுமார், வடிவேலு, சாவித்திரி ரங்கராஜ், விக்னேஷ்வரி சுப்ரமணியம், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஏ,கே, இளங்கோ, குமரவேல், எம்ஜிஆர் மன்ற தலைவர் ராசு (எ) முனுசாமி, ஒன்றிய கழகத் துணைச் செயலாளர்கள் நாகராஜ், மல்லிகா, கிளைக் கழக செயலாளர் தங்கராஜ், மணி, யுவராஜ், கழக நிா்வாகிகள்:தங்கவேலு,கௌதம், ஆனந்த், ரங்கன், சிவகுமார், மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

முன்னதாக குபேர கணபதி வீதி விஎன்.எஸ் நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வி.என்.எஸ் நகர் சௌடேஸ்வரி அம்மன் கோவில் வீதி நெசவாளர்கள், ஏ.கே.எஸ் நகர் பகுதி குடியிருப்பு வாசிகள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து தார் சாலை பணி மேற்கொண்டமைக்கு நன்றி கூறினார்கள்,

Tags:    

Similar News