ஆற்காட்டில் ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.91 ஆயிரம் பறிமுதல்
ஆற்காடு அருகே ஆவணம் இன்றி பணம் எடுத்துச் சென்ற நபரிடமிருந்து ரூபாய் 91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-09 09:25 GMT
கோப்பு படம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வளவனூர் கூட்ரோடு சாலை அருகே தியாகராஜன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் அவர் கரூர் மாவட்டம் அரவகுறிச்சி வட்டம் மலைகோயிலூர் பகுதியை சேர்ந்த குமார் மகன் சின்னராசு (வயது 24) என்பதும், எந்தவித ஆவணங்களுமினறி ரூ.91 ஆயிரம் எடுத்து சென்றதும் தெரிய வந்தது.பின்னர் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, ஆற்காடு கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.