அண்ணன் இறந்ததால் சோகம்; தொழிலாளி தற்கொலை

நீர்முள்ளிக்குட்டை ராஜாப்பட்டினத்தை சேர்ந்த செல்வம், 6 மாதங்களுக்கு முன்பு தனது சகோதரர் இறந்த சோகத்தை தாங்கமுடியாத நிலையில், நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-12-11 13:41 GMT

பைல் படம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் காரிப்பட்டியை அடுத்த நீர்முள்ளிக்குட்டை ராஜாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (40). இவரது சகோதரர் மணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலைக்குறைவால் இறந்து விட்டார். இதனால் செல்வம் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சோகமாக சுற்றி வந்தார். இந்த நிலையில் செல்வம் பெயரில் கடனுக்கு வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு செல்வத்தின் மனைவி கோவிந்தம்மாள் பணம் கேட்டார். அப்போது கையில் பணம் இல்லை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று கூறிய செல்வம் அயோத்தியாப்பட்டணம் சென்று வருவதாகவும் கூறினார். பின்னர் நேற்று வீட்டிற்கு வந்த செல்வம் வாந்தி எடுத்ததால் மனைவி கோவிந்தம்மாள் அவரிடம் விசாரித்தார். அப்போது மனதுக்கு சரியில்லாததால் மதுவில் அரளி விதையை அரைத்து குடித்ததாக கூறினார். இதையடுத்து கோவிந்தம்மாள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரிப்பட்டடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News