பிரச்சாரத்திற்கு முன்பு ஏ சி எஸ் கோவிலில் சாமி தரிசனம்!

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் வெட்டுவானம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Update: 2024-04-05 06:01 GMT
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் தேர்தலில் வெற்றி பெற வேண்டி சாமி தரிசனம் செய்தார். அதையடுத்து, பள்ளிகொண்டா, வெட்டுவானம் மற்றும் கந்தனேரி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். பின்னர் பிரசாரத்தின் போது பேசிய ஏசி சண்முகம்,"நோயில்லாமல் பள்ளிகொண்டா மக்களை காப்பாற்றுகிறேன். ஒவ்வொரு நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் மருத்துவர்கள் உங்களைத் தேடி உங்கள் பிள்ளைகள் படித்து முடித்து வேலை இல்லாமல் இருந்தால், என்னிடம் விட்டு விடுங்கள். நான் வேலை வாங்கித் தருகிறேன். ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் கூட தனியார் மருத்துவமனைகளில் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள். அண்ணன் நான் உங்களுக்கு இலவசமாக செய்து தருகிறேன்,"என்றார்.
Tags:    

Similar News