அ.தி.மு.க.விடம் இருந்து சசிகலா ஒதுங்கிக் கொள்ள வேண்டும் - எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு

Update: 2024-07-20 11:00 GMT

ராஜன் செல்லப்பா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அ.தி.மு.க.விடம் இருந்து சசிகலா ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றும், சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கினால் இ.பி.எஸ் வாழ்த்து பெற வருவார் என்றும் அ.தி.மு.க-வின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

"அண்ணா வெற்றிபெற்ற போது பெரியாரிடம் ஆசி பெற்றதை போல சசிகலா ஒதுங்கிக் கொண்டால் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு ஈ.பி.எஸ். வாழ்த்து பெற வருவார்"

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராஜன் செல்லப்பா, "சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், அவரை சந்திப்பவர்கள் யாரும் அ.தி.மு.க தொண்டர்கள் கிடையாது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்கிற பெயரையும், கொடியையும் பயன்படுத்த விடாமல் சசிகலா மீது வழக்கு தொடரப்படும்.

அ.தி.மு.க.விடம் இருந்து சசிகலா ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அண்ணா வெற்றிபெற்ற போது பெரியாரிடம் ஆசி பெற்றதை போல சசிகலா ஒதுங்கிக் கொண்டால் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு இ.பி.எஸ். வாழ்த்து பெற வருவார். சசிகலா போயஸ் கார்டனில் ஓய்வெடுத்தால் எங்களுக்கு மரியாதையாக இருக்கும்." என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News