எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்ந்து சீமான் அறிவிப்பு !

Update: 2024-07-18 09:04 GMT

சீமான் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் 21ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

மக்களை வாட்டிவதைக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, மின்கட்டணத்தை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடும் முறையைக் கைவிட்டு, ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களை வாட்டிவதைக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி நாம் தமிழர் கட்சிசார்பில் 21ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News