தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் சீமான் சந்திப்பு!

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.

Update: 2024-03-04 10:42 GMT

சீமான் 

கரும்பு விவசாயி சின்னம் பறிக்கப்பட்டது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை இன்று சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''கர்நாடகாவில் ஒருவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னம் கேட்காமல் அவர்களாகவே வழங்கியதாக கர்நாடகாவை சேர்ந்தவர் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கிறேன். வெள்ள பாதிப்பு பணிகள் காரணமாக, நாங்கள் மனு அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த கால அளவுக்குள்தான் நாங்களும் மனு அளித்தோம்.

திமுக, அதிமுகவுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சிதான். அதை கணக்கில் கொள்ளாமல், அவர் முதலில் மனு கொடுத்ததாக கூறுகின்றனர்.

டார்ச் லைட் சின்னத்தை மநீமவுக்கு ஒதுக்கியப் பிறகுதான் எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விஷயமே எங்களுக்குத் தெரியவந்தது.'' என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News