செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்

வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-01 03:00 GMT

வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


வங்கி சார்பில், அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்பிக்கப்படும் வரை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வைக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. ஏற்கனவே வங்கி ஆவணங்கள் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது அந்த பணப்பரிமாற்றம் தொடர்பான வங்கி ஆவணங்களில் 2 செலான்கள் நகல் எடுக்கப்பட்டவை என்று செந்தில் பாலாஜி மனு அளித்துள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36 வது முறையாக நீட்டித்தும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags:    

Similar News