நிறைவாழ்வு முதியோர் இல்லத்துக்கு செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் உதவி

இல்லத்தில் உள்ள முதியவர்களிடம் மாணவர்கள் கலந்துரையாடினர்

Update: 2023-12-08 06:37 GMT

நிறைவாழ்வு முதியோர் இல்லத்துக்கு செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் உதவி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பகுதி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி நிறைவாழ்வு முதியோர் இல்லத்தில் முதியவர்களை லிட்டில் பியர்ல்ஸ் அறக்கட்டளையினர் பராமரித்து வருகின்றனர். மாமாங்கம் செந்தில் பப்ளிக் பள்ளி நிர்வாகி தனசேகர், முதல்வர் மனோகரன், ஆசிரியை மெர்சி ஆகியோர் உதவியுடன் 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் முதியோர் இல்லத்துக்கு தேவையான ரூ.1 லட்சம் மதிப்பிலான 30 ரெக்சின் மெத்தைகள், தலயணைகளை வழங்கினர். மேலும் அங்கிருந்த முதியவர்களிடம் உரையாடினர். நிகழ்ச்சியில் இல்ல மேலாளர் சின்னப்பன், திரைப்பட இயக்குனர் இளவரசன், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நல உதவிகளை வழங்கி கல்வி நிறுவனத்துக்கு இல்ல நிறுவனர் அண்ணாதுரை நன்றி கூறினார்.
Tags:    

Similar News