சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-12-01 10:28 GMT

 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் அம்மாபேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (26),  ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 வயது சிறுமியிடம் மீன் வாங்கி தருவதாக கூறி அவரை மாலை 6 மணியளவில் ஆட்டோவில் அழைத்து சென்றார்.பின்னர் அந்த சிறுமி இரவு 10 மணியளவில் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தார். சிறுமியிடம் மணிகண்டன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News