குடும்பத் தகராறில் மாமியாரின் கையை வெட்டிய மருமகன் கைது

சேலத்தில் குடும்பத் தகராறில் மாமியாரின் கையை வெட்டிய மருமகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-12-05 12:20 GMT

சேலத்தில் குடும்பத் தகராறில் மாமியாரின் கையை வெட்டிய மருமகன் கைது செய்யப்பட்டார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் திருவாக்கவுண்டனூர் செங்கன்காடு அய்யர் தெருவை சேர்ந்தவர் தினகரன் . இவரது மனைவி கோகிலா (43). இந்த தம்பதிகளின் மகள் பவித்ரா. இவரை உறவினரான இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி காத்தவராயன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மகன் தனுஷ் (23) என்பவர் கடந்த 2021- ம் ஆண்டு மார்ச் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து சில மாதங்களில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் பவித்ரா தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று மதியம் பவித்ராவின் தாய் கோகிலா வீட்டிற்கு தனுஷ் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்த பவித்ராவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட கோகிலாவும் அவரது கணவரும் தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த தனுஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் என்றும் பாராமல் கோகிலாவின் கையில் வெட்டினார். இதனால் அலறி துடித்த கோகிலாவை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து கோகிலா சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அர்த்தனாரி வழக்கு பதிவு செய்து தனுஷை கைது செய்தார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News