விரைவில் கூட்டணி தொடர்பாக நல்ல செய்தி வரும் - கமலஹாசன் பேட்டி

நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன் - மக்கள் நீதி மையம் கட்சியின் 7 ஆண்டு தொடக்க விழாவில் கமலஹாசன் ஆவேச பேச்சு.

Update: 2024-02-22 07:04 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் தலைவர் அவர்கள் கட்சியின் 7 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு கட்சிக் கொடியினை ஏற்றி, தொண்டர்களிடையே பேசினார் முடிவில் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழுவிடம் கட்சி எடுக்கும் முடிவை உறுதியோடு ஏற்று பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவர் மேடையில் பேசிய கமலஹாசன் நான் அரசியலுக்கு கோபத்தோடு வரவில்லை சோகத்தோடு வந்தேன். என்னை யாராலும் அரசியலை விட்டு அகற்ற முடியாது என்று கூறினார். நான் முழு நேர அரசியல்வாதியா என கேட்கிறார்கள் யார் இங்கு முழு நேர அரசியல்வாதி? ஒருவனும் கிடையாது. கோயம்புத்தூர் தொகுதியில் 90 ஆயிரம் பேர் வாக்கு செலுத்தாததால் நான் தோற்றுப் போனேன். பின்னர் செய்தியாளரிடம் பேசிய கமலஹாசன். விஜய் முழு நேர அரசியல் ஈடுபடுவேன் என கூறி இருப்பது அவருடைய பாணி. மேலும் கூட்டணி விஷயம் பற்றி விரைவில் நல்ல செய்தி வரும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
Tags:    

Similar News