ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என மேலாண் இயக்குநர் தகவல்.

Update: 2024-04-09 17:01 GMT

சிறப்பு பேருந்துகள் 

ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி 12ஆம் தேதி 13 மற்றும் 14ஆம் தேதிகளில் வரும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி புதன்கிழமை அன்று 315 பேருந்துகளும் ஏப்ரல் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 290 பேருந்துகளும், ஏப்ரல் 13ஆம் தேதி சனிக்கிழமை 340 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 10, 12 மற்றும் 13ஆம் தேதிகளில் 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 10 ஆம் தேதி அன்று 315 பேருந்துகளும் 12 ஆம் தேதி அன்று 290 பேருந்துகளும், 13 ஆம் தேதி அன்று 340 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 10 ஆம் தேதி அன்று 40 பேருந்துகளும், 12 ஆம் தேதி அன்று 40 பேருந்துகளும், 13 ஆம் தேதி அன்று 40 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் , ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் புதன் கிழமை அன்று 7,878 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 6,610 பயணிகளும் சனிக்கிழமை 4,143 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 11,375 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் அறிவுறுத்தி மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News