தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்!

Update: 2024-02-19 08:30 GMT

விசிக ஆர்ப்பாட்டம்

ஈவிஎம் எந்திரங்களில் பாஜக முறைகேடு செய்து வருவதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் கூறி தமிழக முழுவதும் பிப்ரவரி 23ஆம் தேதி விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பாஜக அரசின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. ஈவிஎம் இயந்திரங்களை வைத்து பாஜக சதி செய்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகை சீட்டை இணைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். பாஜகவின் சதியை முறியடிக்க வேண்டும். வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 23.02.2024 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம்.'' எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News