மாநில அளவிலான கைப்பந்து போட்டி; தேர்வான வீரர்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கைப்பந்து போட்டி; தேர்வான சேலம் வீரர்களுக்கு பாராட்டு

Update: 2023-11-30 12:54 GMT

மாநில அளவிலான கைப்பந்து போட்டி; தேர்வான வீரர்களுக்கு பாராட்டு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாநில அளவில் 14 வயதிற்குபட்ட பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக மாவட்ட அளவிலான தேர்வு போட்டி சேலத்தில் நடைபெற்றது; பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. இறுதியில் சேலம் மாவட்டம் ஏ.என். மங்கலம் செயின்ட் மேரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடம் பெற்று மாநில போட்டிக்கு தேர்வு பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழா சேலத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ் தலைமை தாங்கி மாணவர்களை பாராட்டி, விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர் அகிலாதேவி, நிர்வாகிகள் ஹரிகிருஷ்ணன், நந்தன், பயிற்சியாளர் பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News