புளியம்பட்டி: அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த பெண்
புளியம்பட்டியில் அரசு பேருந்து மீது கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-15 07:32 GMT
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அடுத்த புளியம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட நல்லூர் என்ற இடத்தில் கோவையில் இருந்த சத்தியமங்கலம் நோக்கி வந்த அரசு பேருந்தின் மீது செல்வநாயகி மில் அருகே பெண் ஒருவர் கல் வீசி தாக்கயதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. புளியம்பட்டி போலீஸார் விசாரனை நடத்தியதில் புளியம்பட்டி அடுத்த நல்லூர், பண்ணாடிபுதுரை சேர்ந்த மாரக்கால் (57) என தெரியவந்தது. இவர் கடந்த 10 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீஸார் தெரிவித்தனர்.