கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Update: 2023-11-15 09:18 GMT
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு,பாதுகாப்பு  நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

Tags:    

Similar News